Pages

11 February 2015

மண்டல அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர்க்கூட்டம்


மேற்கு மண்டலத்திற்குபட்ட அஞ்சல் துறை ஓய்வூதியர்கள்  குறைதீர்க் கூட்டம்  வருகின்ற 25.02.2015 திங்கள் கிழமையன்று காலை 11.30 மணியளவில், கோயம்புத்தூர்,  R.S.புரம் தலைமை அஞ்சலகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள  அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அது சமயம், நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று கோட்ட அளவில் தீர்க்க இயலாத தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.   அச்சமயம்  ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களையும் தங்கள் வசம் எடுத்து செல்ல வேண்டும். மேலும் தங்கள் குறைகளை திரு.பத்மநாபன், AO, O/o அஞ்சல் துறை தலைவர் (மேற்கு மண்டலம்), கோயம்புத்தூர் – 641 002 என்ற முகவரிக்கு 16.02.15 க்குள் " Pension Adalat" என்று மேற்குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு.வ.முத்துராஜ் அவர்கள்   தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment